காட்டுப் பகுதிக்கு தேன் எடுக்கச் சென்றவருக்கு நேர்ந்த துயரம்.!
திருகோணமலையில் இடம்பெற்ற காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
திருகோணமலை, கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பக்மீகம பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய ஹேரத் ஹமிகே விஜேரத்ன என்ற நபர் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
மேற்படி நபர் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒட்டிச்சங்குளம் காட்டுப் பகுதிக்குத் தேன் எடுப்பதற்காகச் சென்றிருந்த வேளையிலேயே காட்டு யானையின் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
அவரைக் குடும்பத்தினர் கோமரங்கடவல மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தற்போது அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காகத் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளைக் கோமரங்கடவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.