உள்ளடக்கத்திற்குச் செல்க

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஆயிரக்கணக்கான எரிவாயு சிலிண்டர்கள்!

மகாராஷ்டிராவின் ராய்கட் மாவட்டத்தில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் படல்கங்கா சமையல் எரிவாயு சிலிண்டர்கள் (LPG) நிரப்பும் ஆலையை கனமழை சூழ்ந்தன.

இதனால், அங்குள்ள சுமார் 3,000 கேஸ் சிலிண்டர்கள் (நிரப்பப்பட்டவை மற்றும் காலியானவை உட்பட) படல்கங்கா ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

ஆற்றின் கீழ்நோக்கிய பகுதிகளில் கண்டெடுக்கப்படும் சிலிண்டர்களைக் கையாள வேண்டாம் என்று அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆற்றிலோ அல்லது வெள்ளத்திலோ அடித்து வரப்பட்ட அந்தச் சிலிண்டர்களில் எரிவாயு உள்ளதா அல்லது அவை பாதுகாப்பான நிலையில் உள்ளனவா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

எனவே, வெறும் ஆர்வத்தாலோ அல்லது பயன்பாட்டிற்காகவோ அவற்றை எடுப்பது, திறப்பது அல்லது வீட்டிற்கு எடுத்துச் செல்வது மிகவும் ஆபத்தானதாக அமையலாம் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

எந்தவிதமான ஆபத்துகளையும் தவிர்க்குமாறும், ஆற்றிலோ அல்லது அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலோ சிலிண்டர்கள் தென்பட்டால் உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்குமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதிகாரிகள் நிலைமையை ஆய்வு செய்து வருகின்றனர்; வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட சிலிண்டர்களைக் கண்டறிந்து மீட்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்
Thinakaran